Sri Bala Dhyana Vilakkam
மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம். ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.
எந்த யோகப்பயிற்சி முறையையும் பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன.
மேலும் சில சூபி ஞானியரின் பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன. புனித மறைகளும் சித்தர்களும் ஞானிகளும் இறைவன் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர்.
உள்ளார்ந்த பக்தியுடன் அவளை தியானிக்கும்போது மன அமைதி, ஆன்மீக தெளிவு மற்றும் பாதுகாப்பு உணர்வு நம்முள் ஆழமாக வளர்கிறது.